3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை – போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் கைது!

Default Image

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் முதியவர்கள் என வயது வித்தியாசமே பார்க்காமல் பலாத்காரம் செய்ய துணியும் கொடூரர்கள் அதிகரித்து விட்டார்கள். இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் தங்களின் மூன்று வயது பெண் குழந்தையுடன் சென்னை ஆம்பத்தூர் பத்தரவாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள சாலையோரத்தில்வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு வளன் மற்றும் சுபாஷ் ஆகிய இரு இளஞர்கள் பயிற்சி டிப்ளமோ பணியாளர்களாக பாடியில் உள்ள உதிரிப்பாக தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் இவர்கள் தங்கியிருக்க கூடிய வீட்டருகே விளையாடிய இத்தம்பதியினரின் 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அழுதுகொண்டு வீட்டுக்கு வந்த குழந்தையிடம் பெற்றோர் விசாரித்ததில் இதை கண்டறிந்துள்ளனர். இதனடிப்படையில் அத்தம்பதியினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அவர்களின் புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்