DMK Chief secretary Duraimurugan [File Image]
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 3 திமுக கவுன்சிலர்களை மற்றும் திமுக கட்சி பிரதிநிதி ஒருவர் என மொத்தம் நான்கு பேரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணனுக்கு எதிராக அவ்வபோது ஒரு சில திமுக கவுன்சிலர்கள் போர்கொடி தூக்குவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற திருநெல்வேலி மாமன்ற கூட்டத்தில் கூட மேயர் மற்றும் துணை மேயர் வராத காரணத்தால் திமுக கவுன்சிலர்கள் சிலர் தர்ணாவில் ஈடுபட்டது அப்போது பேசுபொருளாக மாறியது
திமுக மேடையில் பேசுவது ஒன்று… செயல்பாட்டில் வேறொன்று – வானதி சீனிவாசன்
திமுக கவுன்சிலர்ளின் இந்த சம்பவங்களை தொடர்ந்து நேற்று திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதன்படி திமுக மாநகராட்சி 6வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24-வது வார்டு உறுப்பினர் ரவீந்தர் மற்றும் 7 வார்டை சேர்ந்த திமுக பிரதிநிதி சுண்ணாம்புமணி எனும் ஆர்.மணி ஆகியோர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சி கட்டுப்பாட்டு மீறி செயல்பட்டதாக கூறியும், கழகத்திற்கு அவபெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாகவும் கூறியும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர் என துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…