கொத்துக் கொத்தாக பறிமுதல் செய்யப்பட்ட போதை சாக்லேட்.!

Default Image

திருப்பூரில் தடை செய்யப்பட்ட போதை சாக்லேட் விற்கப்பட்டு வந்த நிலையில், அங்கு விரைந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அதனை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சின்னக்கரையில் தடை செய்யப்பட்ட போதை சாக்லேட்  விற்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இந்நிலையில் அங்கு விரைந்த உணவு பாதுகாப்பு துறை, அங்கு சோதனை நடத்தினார்கள். அப்பொழுது, அங்கு தடை செய்யப்பட்ட போதை சாக்லேட், குவியல் குவியலாக இருப்பதை கண்டு அதிகாரிகள் வியந்தனர். அதனை பறிமுதல் செய்து எடைப்பார்கையில், 50 கிலோ இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில், 3 பேரை கைது செய்துள்ள நிலையில், அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்