போதைக்காக குளிர்பானத்தில் வார்னிஷ் கலந்து குடித்த 3 பேர் உயிரிழப்பு

Default Image

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்ததால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. பேருந்து, ரயில்,விமான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது.மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டன. இதில் டாஸ்மாக்களும் அடங்கும்.

இந்நிலையில்,செங்கல்பட்டில், டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நிலையில்,போதைக்காக 3 பேர் குளிர்பானத்தில் வார்னிஷ் கலந்து குடித்துள்ளனர்.இதனால் 3 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் என்ற ஊரில் வசிக்கும் 3 பேர்  சேவிங் லோசனை குளிர்பானத்தில் கலந்து குடித்ததால்  பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்