காங்கிரஸ் கட்சியில் எதிர்காலம் இல்லாத காரணத்தால் அக்கட்சியை விட்டு விலகி வருகின்றனர் என்று புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் -திமுக கூட்டணி 19 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.அரசுக்கு எதிராக பேசிய நிலையில் பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததால், காங்கிரஸ் கூட்டணி பலம் 18 ஆக குறைந்தது.
இதன் பின் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தநமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் 4 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் 14-ஆக குறைந்ததால், நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.வருகின்ற 22-ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கூறுகையில்,காங்கிரஸ் கட்சியில் உள்ள மேலும் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியில் எதிர்காலம் இல்லாத காரணத்தால் அக்கட்சியை விட்டு விலகி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…