சென்னையில் 3 நாட்கள் ‘நம்ம ஊரு திருவிழா’- அரசு அறிவிப்பு..!

Default Image

சென்னையில் 3 நாட்கள் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி, தமிழகத்தினைச் சார்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் கலைவிழா, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் ஆண்டுதோறும் சென்னையில் மூன்று நாட்கள் நடத்தப்படும்.

இதற்கென தொடரும் செலவினமாக கலை பண்பாட்டுத்துறையின் ஆண்டு வரவு செலவு ஒதுக்கீட்டிலிருந்து ரூ.91 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து, 3 நாட்கள் ‘நம்ம ஊரு திருவிழா’ நடத்த அரசு அனுமதித்து ஆணை வெளியிட்டுள்ளது.

அரசாணையினை செயல்படுத்தும் வகையில் ‘நம்ம ஊரு திருவிழா’ எனும் தலைப்பில் தமிழகத்தின் பாரம்பரியமான கிராமியக் கலைகளை வெளிப்படுத்தும் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு, சென்னையில் 7 இடங்களில் 14.01.2022, 15.01.2022, 16.01.2022 ஆகிய மூன்று நாட்கள் கலை விழா நடைபெறவுள்ளது. அதுமட்டுமல்லாமல் 7 வெளி மாநில கிராமியக் கலைக்குழுவினர் இவ்விழாவில் பங்குகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்