அங்கொட லொக்கா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காதலி உட்பட 3 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.
இலங்கையைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா என்ற லசந்த பெரேரா, கோவையில் தனது காதலியால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டது இந்த வழக்கு தற்பொழுது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அங்கொட லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், அவர்களை இன்று சிபிசிஐடி அதிகாரிகள் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்பொழுது கைதான 3 போரையும் 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விசாரணை முடிந்ததும், அவர்கள் மூன்று பெரையும் 15-ம் தேதி, மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…