அங்கொட லொக்காவின் காதலி உட்பட 3 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்!

Default Image

அங்கொட லொக்கா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காதலி உட்பட 3 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.

இலங்கையைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா என்ற லசந்த பெரேரா, கோவையில் தனது காதலியால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டது இந்த வழக்கு தற்பொழுது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அங்கொட லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், அவர்களை இன்று சிபிசிஐடி அதிகாரிகள் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்பொழுது கைதான 3 போரையும் 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விசாரணை முடிந்ததும், அவர்கள் மூன்று பெரையும் 15-ம் தேதி, மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்