நீரில் மூழ்கி 3 மாணவிகள் பலி…சோகத்தில் மூழ்கிய ஒரு கிராமம்…!!

Default Image

விழுப்புரம் அருகே ஒரே பள்ளியில் படிக்கும் 3 மாணவிகள் துணி துவைக்கும் போது கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கக்கன் கிராமத்தை சேர்ந்த மணிமொழி , பவதாரணி கௌசல்யா ஆகியோர் அங்கே உள்ள லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்துள்ளனர்.இன்று விடுமுறை நாள் என்பதால் 3 மாணவிகளும் கிணற்றில் துணி துவைக்க அவர்கள் சென்றனர்.

தூணிதுவைக்க சென்ற 3 பேரில் பவதாரணி கால் தவறி கிணற்றில் விழுந்து உள்ளார். அவரை காப்பாற்ற மணிமொழி ,  கவுசல்யாவும் முயற்சித்துள்ளனர். ஆனால் மூவரும் கிணற்று நீரில் மூழ்கி இறந்து விட்டனர்.இறந்த தகவல் அறிந்து வந்த  காவல்துறையினர் மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர் மூன்று மாணவிகள் உயிரிழந்ததால் ஒரு கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்