துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கோவில்பட்டி சோதனைச் சாவடி அருகேகைது செய்யப்பட்டு உள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இன்று அதிகாலை சோதனைச்சாவடியில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர்கள் பணியில் இருந்தனர்.
அப்பொழுது அங்கு ஒரு கார் ஒன்று வந்துள்ளது காரை நிறுத்தி போலீசார் காரிலிருந்து மூன்று பேரிடம் விசாரணை செய்துள்ளனர், அப்பொழுது அந்த மூன்று பெரும் பதட்டத்துடன் பதிலளித்துள்ளனர், உடனடியாக போலீசார் வாகனத்தை சோதனை செய்த போது, 9.எம். எம் ரக துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள், 3 பட்டாகத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணைக்காக மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் விசாரணையில் தெரியவந்து இவர்கள் மூன்று பேரின் மேல் கொலை வழக்கு மற்றும் கொலை மிரட்டல் புகார் உள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இவர்கள் மருத்துவ அவசரம் என்று ஈபாஸ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து கள்ளத்துப்பாக்கி யாரிடம் வாங்கினார்கள் ஏதற்காக ஈரோடு சென்றார்கள் என்பதை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…