கோவில்பட்டி சோதனைச் சாவடியில் 3 பேர் கைது..!

Default Image

துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கோவில்பட்டி சோதனைச் சாவடி அருகேகைது செய்யப்பட்டு உள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இன்று அதிகாலை சோதனைச்சாவடியில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர்கள் பணியில் இருந்தனர்.

அப்பொழுது அங்கு ஒரு கார் ஒன்று வந்துள்ளது காரை நிறுத்தி போலீசார் காரிலிருந்து மூன்று பேரிடம் விசாரணை செய்துள்ளனர், அப்பொழுது அந்த மூன்று பெரும் பதட்டத்துடன் பதிலளித்துள்ளனர், உடனடியாக போலீசார் வாகனத்தை சோதனை செய்த போது, 9.எம். எம் ரக துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள், 3 பட்டாகத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணைக்காக மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் விசாரணையில் தெரியவந்து இவர்கள் மூன்று பேரின் மேல் கொலை வழக்கு மற்றும் கொலை மிரட்டல் புகார் உள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இவர்கள் மருத்துவ அவசரம் என்று ஈபாஸ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து கள்ளத்துப்பாக்கி யாரிடம் வாங்கினார்கள் ஏதற்காக ஈரோடு சென்றார்கள் என்பதை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்