3 சிறார் திருமணங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் தடுத்து நிறுத்தம்!

Default Image

இன்று நடைபெற இருந்த 3 சிறார் திருமணங்களை,  ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

நயினார்கோவில் அருகே கரைமேல்குடியிருப்பு, பரமக்குடி அருகே எலந்தைக்குளம், ஏர்வாடி ஆகிய இடங்களில் நடைபெற இருந்த திருமணங்களில், மணப்பெண்கள் 18 வயது நிறைவடையாத சிறுமிகள் என ராமநாதபுரம் மாவட்ட சைல்டு லைனுக்கு தகவல் வந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட சமூகநல அலுவலர் குணசுந்தரியிடம் புகார் அளிக்கப்பட்டு, அவரது தலைமையில் 3 இடங்களிலும் நேரில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், மணப்பெண்கள் மூவருமே 18 வயது நிறைவடையாத சிறுமிகள் என்பது உறுதியானது. அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், 3 திருமணங்களையும் நிறுத்துவதாக பெற்றோர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்