மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் சிறப்பு பகிர்வு.!

Published by
மணிகண்டன்

தமிழக அரசியலில் மறுக்கமுடியாத ஆளுமை முன்னாள் முதல்வர் திரு மு.கருணாநிதி அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

1957 முதல் தான் முதன் முதலில் போட்டியிட்ட சட்ட மன்ற தொகுதியான குளித்தலை முதல், இறுதியாக 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திருவாரூர் தொகுதி வரையில் இதுவரை தோல்வியை சந்திக்காதவர் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள்.

1957இல் கருணாநிதி அவர்களின் கதை, வசனத்தில்  அரங்கேறிய தூக்குமேடை என்கிற நாடகத்தை பறித்துவிட்டு அசந்துபோன நடிகவேள் எம்.ஆர்.ராதா இவருக்கு ‘கலைஞர்’ எனும் பட்டத்தை அளித்தார். அன்று முதல் தற்போது வரை தனது தொண்டர்களால் கலைஞர் கருணாநிதி என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.

தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவிவகித்துள்ளார். தமிழகமுதல்வராக பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்திற்கு அளித்துள்ளார்.

இவருக்கு மு.க.முத்து, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி, கனிமொழி என 6 பிள்ளைகள் உள்ளனர். அறிஞர் அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகத்திற்கு அண்ணாவின் மறைவுக்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகத்தை சிறப்பாக வழி நடத்தி வந்தார் கலைஞர் கருணாநிதி. அவரது மறைவுக்கு பிறகு கலைஞரின் மகனான மு.க.ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகத்தை முன்னின்று வழி நடத்தி வருகிறார்.

இவர் 75 திரைப்படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். 15 நாவல்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைகள் ஆகியவற்றை எழுதி தமிழ் மொழிக்கு தனது சிறப்பான பங்களிப்பை ஆற்றியுள்ளார்.

ஜூன் 3, 1924ஆம் ஆண்டு பிறந்த கலைஞர் கருணாநிதி, 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7இல் இயற்கை எய்தினார். இன்று அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசியலில் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகான வெற்றிடம் இன்னும் நிரப்பப்படாமலே உள்ளது என்கிற நிதர்சனமான உண்மை இவரின் அரசியல் ஆளுமைக்கு சான்று.

Published by
மணிகண்டன்

Recent Posts

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

10 hours ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

10 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

11 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

12 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

14 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

15 hours ago