அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை அலுவலகம் உள்பட 5 இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை.
புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் பாண்டிதுரையின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பாண்டித்துரை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் இபிஎஸ் ஆதரவாளரான பாண்டித்துரை பல்வேறு ஒப்பந்தங்களை பெற்றிருந்தார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை பெற்று பல்வேறு முறைகேடு செய்ததாக பாண்டித்துரை மீது புகார் எழுந்ததை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ரூ.50 கோடிக்கு வரி ஏய்ப்பு நடைபெற்று உள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஆட்சி காலத்தில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடி மேலாக பணிகளை மேற்கொண்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை அலுவலகம் உள்பட 5 இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாண்டித்துரை மேலாளர் பீட்டர், திருவேங்கைவாசலில் உள்ள வீடு, சிப்காட்டில் உள்ள 2 தொழிற்சாலைகளிலும் நேற்று முதல் தொடர்ந்து ரெய்டு நடைபெற்று வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…