சென்னை நகருக்குள் மட்டும் 288 சோதனை சாவடிகள்.! ஏ.கே.விஸ்வநாதன்.!

Default Image

சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், சென்னையில் மிக கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படும். அறிவுரை சொல்லி அனுப்பியதால் கடந்த முறை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சென்னை நகருக்குள் மட்டும் 288 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சென்னைக்கு வெளியே தினசரி வேலைக்கு சென்று வர அனுமதி இல்லை. போலி பாஸ் மூலம் செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க வாகனங்களை செல்ல அனுமதிக்கப்படாது, கவசம் அணியாமல் வெளியே வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும். ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள், மறுபதிவு செய்ய வேண்டும், பழைய இ-பாஸ் செல்லாது என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்