மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

Published by
Edison

திருத்தணி:மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை,திருத்தணியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ச்ன்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி மற்றும் தயாரிப்பு பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டார்.

இந்நிலையில்,மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை,திருத்தணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,பேசிய முதல்வர் அவர்கள்:”யாரையும் நம்பியிருக்காமல் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதே மகளிர் சுயஉதவி குழுக்களின் நோக்கமாக உள்ளது.இத்தகைய மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் விதமாக மகளிர் சுயஉதவி குழுக்கள் அமைக்கப்பட்டது கலைஞர் அவர்கள் ஆட்சியில்தான்.மகளிர் சுய உதவி குழுக்களுக்காக திமுக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

அந்த வகையில்,ஆட்சிக்கு வந்ததும் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்,அத்துறைக்கு அமுதா அவர்களை செயலாளராக நியமித்தேன்.தருமபுரி ஆட்சியராக சிறப்பாக பணியாற்றிய அவர், மகளிர் பயன்பெறும் வகையில் பொறுப்பை சிறப்பாக எடுத்துச் செல்வார்.அதனால்,இனி மகளிர் சுயஉதவி குழுக்களின் நிலை பற்றி கவலைப்பட தேவையில்லை.

மேலும்,மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் இந்த விழா திருத்தணியில் மட்டும் அல்லது தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அதன்படி,இன்று 58,453 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 7,56,142 பேருக்கு மொத்தம் ரூ.2,749.85 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்குள் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில்,இந்த மாத இறுதிக்குள் ரூ.1000 கோடி கடனுதவி வழங்கப்படும்.இது எனது ஆட்சியல்ல,நமது ஆட்சி.அதன்படி,நமது ஆட்சியில் நலத்திட்ட பணிகள் தொடரும்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

1 min ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

36 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

49 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

1 hour ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

1 hour ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

2 hours ago