மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

Published by
Edison

திருத்தணி:மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை,திருத்தணியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ச்ன்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி மற்றும் தயாரிப்பு பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டார்.

இந்நிலையில்,மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை,திருத்தணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,பேசிய முதல்வர் அவர்கள்:”யாரையும் நம்பியிருக்காமல் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதே மகளிர் சுயஉதவி குழுக்களின் நோக்கமாக உள்ளது.இத்தகைய மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் விதமாக மகளிர் சுயஉதவி குழுக்கள் அமைக்கப்பட்டது கலைஞர் அவர்கள் ஆட்சியில்தான்.மகளிர் சுய உதவி குழுக்களுக்காக திமுக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

அந்த வகையில்,ஆட்சிக்கு வந்ததும் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்,அத்துறைக்கு அமுதா அவர்களை செயலாளராக நியமித்தேன்.தருமபுரி ஆட்சியராக சிறப்பாக பணியாற்றிய அவர், மகளிர் பயன்பெறும் வகையில் பொறுப்பை சிறப்பாக எடுத்துச் செல்வார்.அதனால்,இனி மகளிர் சுயஉதவி குழுக்களின் நிலை பற்றி கவலைப்பட தேவையில்லை.

மேலும்,மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் இந்த விழா திருத்தணியில் மட்டும் அல்லது தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அதன்படி,இன்று 58,453 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 7,56,142 பேருக்கு மொத்தம் ரூ.2,749.85 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்குள் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில்,இந்த மாத இறுதிக்குள் ரூ.1000 கோடி கடனுதவி வழங்கப்படும்.இது எனது ஆட்சியல்ல,நமது ஆட்சி.அதன்படி,நமது ஆட்சியில் நலத்திட்ட பணிகள் தொடரும்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

8 hours ago

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

10 hours ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

10 hours ago

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

11 hours ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

12 hours ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

12 hours ago