250 கி.மீ. வேகத்தில் சுவர் மீது மோதிய ஏர் இந்தியா விமானம்….!!

Published by
Dinasuvadu desk

விமானத்தில் பைலட் மற்றும் முதன்மை அதிகாரிகள் ஆகியோரிடம் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி விமான நிலைய ஓடுபாதையில் இருந்து இன்று காலை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 250 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. போயிங் 737 -800 ரக விமானத்தில் மொத்தம் 136 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் திருச்சியில் இருந்து துபாய்க்கு செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.

துபாய்க்கு செல்லவிருந்த விமானம் விபத்துக்குள்ளானது

இந்த நிலையில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய சுற்றுச் சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. குறைந்த உயரத்தில் பறந்ததால், விமான நிலைய சுற்றுச் சுவரில் சக்கரங்கள் மோதிச் சென்றன.

முன்னெச்சரிக்கையாக மும்பையில் தரையிறக்கம் செய்யப்பட்டது

இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று காலை 1.30-க்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி விமானம் புறப்பட்டது. தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக கோளாறு ஏற்பட்டதில், விமானத்தின் அடிப்பாகம் விமான நிலையத்தின் சுற்றுச் சுவரில் மோதிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இறுதியாக துபாய் செல்லும் அளவுக்கு விமானத்திற்கு தகுதிகள் உள்ள என்று விமான பைலட் தெரிவித்தார். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் துபாய்க்கு செல்வதை தவிர்த்து மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விமானத்தின் பைலட் கேப்டன் டி.கணேஷ் பாபு, முதன்மை அதிகாரி கேப்டன் அனுராக் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2010 மே மாதத்தின்போது, ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 – 800 ரக விமானம் துபாய்க்கு சென்று கொண்டிருந்தது. அன்றைக்கு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுதளத்தில் தடுமாறிச் சென்று விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 158 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago