பணியில் சேர்ந்த சக காவலரின் குடும்பத்திற்கு 25.14 லட்சம் நிதி உதவி… நெகிழவைத்த சம்பவம்…

Published by
Kaliraj

சிறுநீரக கோளாறு காரணமாக இறந்த, தலைமை காவலர் குடும்பத்திற்கு, அவருடன் பணியில் சேர்ந்த சக காவலர்கள், 25.14 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினர்.

சென்னை, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிந்தவர் சரவணகுமார், வயது 37. இவர், சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த   ஆகஸ்ட் 18ல் உயிரிழந்தார். இவருக்கு, இந்துமதி என்ற மனைவியும்,  கோபிகா, 11, பிரியங்கா, 9, என, இரண்டு மகள்கள் உள்ளனர். தமிழக காவல் துறையில், 2003ல், இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்த சரவணகுமார். இவரது குடும்பச் சூழலை அறிந்த, சரவணகுமாருடன் பணியில் சேர்ந்த, 5,000 காவலர்கள்  ‘வாட்ஸ் ஆப்’ குழு ஒன்றை துவங்கி, 25.14 லட்சம் ரூபாய் நிதி திரட்டினர். அதில், 20 லட்சத்து, 90 ஆயிரத்து, 618 ரூபாய்க்கு, சரவணகுமாரின் இரு மகள்களின் பெயரில், எல்.ஐ.சி., பாலிசியாக காப்பீடு செய்து செலுத்தினர். மீதமுள்ள, 4 லட்சத்து, 23 ஆயிரத்து, 387 ரூபாயை, ரொக்கமாக, சரவணகுமாரின் மனைவி மற்றும் மகள்களிடம், சென்னை, வேப்பேரியில், காவல்துறை கண்காணிப்பாளர் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வாயிலாக, நேற்று வழங்கினர்மேலும், மூவர் பெயரிலும், 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடும் எடுத்துக் கொடுத்தனர். தன்னுடன் பணியில் சேர்ந்த சக காவலரின் குடும்பத்தை காப்பாற்ற, உடன் பணியில் சேர்ந்த அனைவரும் சேர்ந்து  எடுத்த முயற்சிக்கு, கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago