சிறுநீரக கோளாறு காரணமாக இறந்த, தலைமை காவலர் குடும்பத்திற்கு, அவருடன் பணியில் சேர்ந்த சக காவலர்கள், 25.14 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினர்.
சென்னை, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிந்தவர் சரவணகுமார், வயது 37. இவர், சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 18ல் உயிரிழந்தார். இவருக்கு, இந்துமதி என்ற மனைவியும், கோபிகா, 11, பிரியங்கா, 9, என, இரண்டு மகள்கள் உள்ளனர். தமிழக காவல் துறையில், 2003ல், இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்த சரவணகுமார். இவரது குடும்பச் சூழலை அறிந்த, சரவணகுமாருடன் பணியில் சேர்ந்த, 5,000 காவலர்கள் ‘வாட்ஸ் ஆப்’ குழு ஒன்றை துவங்கி, 25.14 லட்சம் ரூபாய் நிதி திரட்டினர். அதில், 20 லட்சத்து, 90 ஆயிரத்து, 618 ரூபாய்க்கு, சரவணகுமாரின் இரு மகள்களின் பெயரில், எல்.ஐ.சி., பாலிசியாக காப்பீடு செய்து செலுத்தினர். மீதமுள்ள, 4 லட்சத்து, 23 ஆயிரத்து, 387 ரூபாயை, ரொக்கமாக, சரவணகுமாரின் மனைவி மற்றும் மகள்களிடம், சென்னை, வேப்பேரியில், காவல்துறை கண்காணிப்பாளர் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வாயிலாக, நேற்று வழங்கினர்மேலும், மூவர் பெயரிலும், 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடும் எடுத்துக் கொடுத்தனர். தன்னுடன் பணியில் சேர்ந்த சக காவலரின் குடும்பத்தை காப்பாற்ற, உடன் பணியில் சேர்ந்த அனைவரும் சேர்ந்து எடுத்த முயற்சிக்கு, கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…