தமிழகத்தில் கடந்த 22 நாட்களில் கொரோனாவால் 2,485 பேர் உயிரிழப்பு!

Default Image

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 22 நாட்களில் மட்டும் 2,485 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தநிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 5,980 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,73,410 ஆக அதிகரித்துள்ளது.

அதில் 80 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,420 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 80 பேரில், தனியார் மருத்துவமனையில் 23 பேரும், அரசு மருத்துவமனையில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வரிசையில், கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், தமிழகத்தில் கடந்த 22 நாட்களில் கொரோனா தொற்றால் 2,485 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 21 நாட்களுக்கு பின், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100- க்கு கீழ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்