[Image source : facebook/@Vels Vidhyalaya, Ambasamudram]
அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து வந்து பலரது பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக 24 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதியில் விசாரணைக்காக அழைத்து வந்த பலரது பற்களை பிடுங்கி சித்தரவதை செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் பெயரில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது 4 வழக்குகள் பதியப்பட்டு துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உட்பட்டு உள்ளார்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பல்பிடுங்கிய விவகாரம் தொடர்பாக 24 காவலர்களை பணியிட மாற்றம் செய்து நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர்…
சென்னை : நேற்று ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ்…
நாய்பிடாவ் : மியான்மரில் நேற்று 7.7 ரிக்டர் அளவு மற்றும் 6.4 ரிக்டர் என்ற அளவு இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து…