அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதலமைச்சரை கடவுள் என்று கூறி 24 அரியர் வைத்திருந்த மாணவன் ஒருவன் நன்றியை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் கூறியதை அடுத்து மாணவ, மாணவர்கள் முதல்வருக்கு பாராட்டு மழைகளை பொழிந்தும், நன்றியையும் தெரிவித்தும் வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சியில் எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள கிரராப்பட்டியை சேர்ந்தவர் சஞ்சய் நேரு. பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவர் மொத்த 24அரியர்கள் வைத்துள்ளார். இந்த நிலையில் முதல்வர் ஆல் பாஸ் என்று அறிவித்ததை தொடர்ந்து சஞ்சய் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார். இந்த நிலையில் முதலமைச்சரை சஞ்சய் கடவுள் என்று புகழ்ந்து கூறியதோடு, எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆல் பாஸ் என்று அறிவித்த முதல்வருக்கு அனைத்து மாணவர்களின் சார்பில் நன்றி என்றும், அரியர் என்ற சுமையை நீக்கிய முதலமைச்சருக்கு நன்றி கூறும் வகையில் இனி வரும் தேர்வுகளில் அரியர் இல்லாமல் தேர்ச்சி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…