அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதலமைச்சரை கடவுள் என்று கூறி 24 அரியர் வைத்திருந்த மாணவன் ஒருவன் நன்றியை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் கூறியதை அடுத்து மாணவ, மாணவர்கள் முதல்வருக்கு பாராட்டு மழைகளை பொழிந்தும், நன்றியையும் தெரிவித்தும் வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சியில் எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள கிரராப்பட்டியை சேர்ந்தவர் சஞ்சய் நேரு. பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவர் மொத்த 24அரியர்கள் வைத்துள்ளார். இந்த நிலையில் முதல்வர் ஆல் பாஸ் என்று அறிவித்ததை தொடர்ந்து சஞ்சய் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார். இந்த நிலையில் முதலமைச்சரை சஞ்சய் கடவுள் என்று புகழ்ந்து கூறியதோடு, எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆல் பாஸ் என்று அறிவித்த முதல்வருக்கு அனைத்து மாணவர்களின் சார்பில் நன்றி என்றும், அரியர் என்ற சுமையை நீக்கிய முதலமைச்சருக்கு நன்றி கூறும் வகையில் இனி வரும் தேர்வுகளில் அரியர் இல்லாமல் தேர்ச்சி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…