234 தொகுதியிலும் காவி கொடி பறக்கும்…..!! முதலமைச்சராக ரஜினிகாந்த் ஆவார்..!!
234தொகுதியிலும் காவி கொடி பறக்கும் ரஜினிகாந்த் தமிழக முதலமைச்சார் ஆவார் என்று இந்து மக்கள் கட்சி சேர்ந்த அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
ரத யாத்திரையை தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்பத் தமிழகத்தில் திமுக அதிமுக கட்சிகளுக்கு மாறாக ஆன்மீக அரசியல் பரப்புரை யாத்திரை துவங்கியுள்ளது.முன்னதாக இந்த யாத்திரைக்கு சென்னையில் தடை விதிக்கப்பட்டபோதிலும் நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி இந்த யாத்திரையை நடத்துகிறோம்.
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இந்த 2 கட்சிகள் இல்லாத அரசியல் அதுவும் ஆன்மீக அணியை உருவாக்குவதற்காகவும் தமிழகத்தில் இந்துத்துவா கொள்கையை கால் ஊன்ற செய்வதற்காகவும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் இந்த யாத்திரை நடந்து வருகிறது.
மேலும் சர்கார் மற்றும் விஜய் பட பேனர்களை கிழிப்பதற்கு எதிராக நடிகர் விஜய் ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுப்பது எல்லாம் இயல்பானது. மேலும் பேசிய அவர் ரஜினிகாந்த் வழி என்றாலே அது தனி வழி.தமிழகத்தில் 234தொகுதியிலும் காவி கொடி பறக்கும்.அதில் ரஜினிகாந்த் தமிழக முதலமைச்சார் ஆவார். ரஜினிகாந்த் முழுமையான ஆன்மீக அரசியல் என்று கூறியதல் ரஜினிகாந்த்க்கு இந்து மக்கள் கட்சி முழுமையான தனது ஆதரவை தருகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.மேலும் அந்த அரசியல் திமுக, அதிமுக கட்சிகளை விரட்டி அடிக்கும் என்று தெரிவித்தார்.
DINASUVADU