மீண்டும் மணலியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 229 டன் அம்மோனியம் நைட்ரேட்.!

Published by
Ragi

சென்னை மணலி துறைமுகத்தில் இருந்து 229டன் அம்மோனியம் நைட்ரேட்டுடன் 12 கன்டெய்னர் லாரி வாயிலாக ஐதராபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

கடந்த சில தினங்களுக்கு முன்பு லெபனான் நாட்டில் பெய்ரூட் துறைமுகத்தில் அம்மோனியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்திற்கு கடந்த 6 ஆண்டுகளாக அம்மோனியம் நைட்ரேட்டை ஒரே இடத்தில் இருப்பு வைத்தது தான் காரணம் என்று கூறப்பட்டதை அடுத்து சென்னை மணலி துறைமுகத்தில் 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்ட 740 டன் எடையுள்ள அம்மோனியம் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு மணலியில் உள்ள சரக்குப்பெட்டகத்தில் 37 கன்டெய்னர்களிலாக வைக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் 12 ஆயிரம் பேர் வசிப்பதால், அம்மோனியம் நைட்ரேட் கன்டெய்னர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து, நேற்றைய முன்தினம் சுங்கத்துறை அதிகாரிகள் தலைமையில் ஹைதராபாத் நிறுவனத்திற்கு அம்மோனியம் நைட்ரேட் நிறைந்த 37 கன்டெய்னர்களில் 10 கன்டெய்னர்களை லாரி மூலம் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் தற்போது மேலும் 229 டன் அம்மோனியம் நைட்ரேட் நிறைந்த 12 கன்டெய்னர் லாரிகள் சாலை வழியாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Published by
Ragi

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

5 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

13 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago