கஞ்சா போதையில் தெருவில் சென்றவர்களை கடித்து குதறிய 22 வயது இளைஞன்!

Published by
Rebekal

கஞ்சா போதை தலைக்கேறியதும் தெருவில் செல்லக்கூடிய மக்களையெல்லாம் விரட்டி விரட்டி கடித்து குதறிய 22 வயது இளைஞன் கட்டிப் போடப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 22 வயதுடைய கண்ணன் எனும் இளைஞன் கடந்த பல வருடங்களாகவே கஞ்சா அடிக்கும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது இவருக்கு கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில் போதையில் என்ன செய்வதென்று அறியாமல் தெருவில் செல்லக்கூடிய மக்களை எலலாம் விரட்டி விரட்டி ரத்தம் குடித்து ரத்தக் காயங்களை கொடுத்துள்ளார். உடல் முழுவதும் ரத்தத்துடன் காணப்படக்கூடிய இந்த 22 வயது இளைஞனை அங்குள்ள சில இளைஞர்கள் மிகவும் மல்லுக்கட்டி அச்சத்துடன் கைகளையும் கால்களையும் கட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தன்னை அவிழ்த்து விடவேண்டும் எனவும் தான் சுதந்திரமாக திரிய வேண்டும் எனவும், தான் ஏற்கனவே வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் காணாமல் போன விரக்தியில் தான் இவ்வாறு கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளதாகவும் உளறிக்கொண்டே சென்றுள்ளான்.

ஒரு கட்டத்தில் என் கட்ஸை பாருங்கள், ஒரே அடியில ஒருத்தனை தூக்கி வீசிறுவேன் என கூறி தன்னை அவிழ்த்துவிடுமாறு கூறியுள்ளார். இளைஞன் எவ்வளவு கூறியும் யாரும் கயிற்றை அவிழ்த்து விடாததால் அருகில் இருந்தவர்கள் எல்லாம் மிரட்ட ஆரம்பித்துள்ளார். அதன்பின் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றவர்களே அச்சத்துடன் மருத்துவமனையில் உள்ள கட்டிலில் கட்டிப் போட்டு மருத்துவர்களை அழைத்துள்ளனர். மருத்துவர்கள் அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து தற்போது சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. கஞ்சா போதையில் 22வயது இளைஞன் தனது வாழ்க்கையை தொலைத்து விட்டு திரைப்பட வசனம் பேசிக் கொண்டிருக்கக் கூடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by
Rebekal

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

3 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

4 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago