அமெரிக்கவில் உள்ள ஒரு உளவு நிறுவனம் ஆபாச படங்கள் பார்ப்பவர்களின் பட்டியலை வெளியிட்டது.அந்த பட்டியலில் இந்தியா தான் அதிக அளவு ஆபாச படங்கள் பார்ப்பதாக கூறப்பட்டது.
பின்னர் அந்த பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் அந்த பட்டியலை தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு ஏடிஜிபி அனுப்பி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கூறினர்.
அந்த பட்டியலை வைத்து கொண்டு தமிழகத்தில் யார் யார் சிறார் ஆபாச படங்களை பார்க்கிறார்களோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் இந்த பட்டியல் அனுப்பப்பட்டது. முதற் கட்டமாக திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதே போன்று நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தமிழக காவல் துறை அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தாலோ காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கும்படி காவல் துறை கூறியிருந்தனர். இந்நிலையில் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 72 வயதான மோகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மோகனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…