BMW காரில் கஞ்சா விற்பனை.! 21 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார்.!

Default Image

கோவையில் BMW சொகுசு காரில் இருவர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். 

தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா போன்ற போதைப்பொருள் விநியோகத்தை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து காவல்துறை கட்டுப்படுத்தி வருகிறது.

இருந்தாலும், இளைஞர்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கும், இந்த கஞ்சா தினமும் பல்வேறு இடங்களில் பிடிபடுவது வேதனைக்குரியதாக இருந்தாலும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மன ஆறுதலையும் தருகிறது.

இந்நிலையில், நேற்று போலீசார் கோவை, சாய் பாபா நகரில் , போலீசார் சோதனையில் ஈடுப்பட்ட போது, BMW சொகுசு காரில் கார்த்தி , வீரசிவகுமார் ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்