#2019 RECAP : பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ

Default Image
  • சென்னையில் பேனர் விழுந்ததில் இளம் பெண் உயிரிழந்தார்.
  • இந்த விவாகரத்தில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.  

கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இது தொடர்பாக பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.மேலும் அவரது உறவினர் மேகநாதன், லாரி டிரைவர் மனோஜ் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜெயகோபாலுக்கு நிபந்தனைகளின் பெயரில் ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில்  இந்த வழக்கில் பரங்கிமலை போக்குவரத்து போலீசார்  குற்றப்பத்திரிகையை தயாரித்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகலை பெற ஜெயகோபால் உள்பட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.ஆனால்  ஜெயகோபால் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் விசாரணை 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

seeman tvk vijay
INDvENG 3rd ODI ENG won the toss
rohit sharma and virat kohli
Rohit sharma - Virat kohli
Andhra Pradesh CM N Chandrababu naidu
senthil balaji edappadi palanisamy