1-ஆம் தேதி முதல் சென்னையில் 200 வார்டுகளிலும் 200 தடுப்பூசி முகாம்..!

Published by
murugan

நாளை மறுநாள் முதல் சென்னையில் உள்ள 200 வார்டிற்கு 1 முகாம் என 200 தடுப்பூசி முகாம்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், 1.9.2021 அன்று முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 27.08.2021 முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 28.08.2021 அன்று முதல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, 01.09.2021 அன்று முதல் 112 கல்லூரிகளில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டலத்திற்கு மூன்று கோவிட் தடுப்பூசி முகாம்கள் என 45 தடுப்பூசி முகாம்கள் பள்ளிகள், மாநகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்கள் 01.09.2021 முதல் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும், 45 இடங்களில் நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி முகாம்கள் 1.9.2021 அன்று முதல் வார்டிற்கு 1 முகாம் என 200 தடுப்பூசி முகாம்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 26.08.2021 அன்று 200 வார்டுகளில் நடத்தப்பட்ட 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். பொதுமக்களின் அருகாமையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்ட காரணக்கினால் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சியின் 200 வார்டுகளில் தடுப்பூசி முகாம்கள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த 200 தடுப்பூசி முகாம்கள் குறித்து விவரங்களை மாநகராட்சியின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், இந்த 200 வார்டுகளில் உள்ள தடுப்பூசி முகாம்களில் இணையதளம் வாயிலாக தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்து கொள்ள மாநகராட்சியின் grcvaccine.in என்ற இணையதள இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தத் தடுப்பூசி முகாம்கள் நாள்தோறும் காலை 8.30மணி முதல் மாலை 400 மணி வரை நடைபெறும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 29.08.2021 வரை 27,17,705 முதல் தவணை தடுப்பூசிகள் 12,11,775 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 39,29,480 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

4 hours ago

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

7 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

8 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

8 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

10 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

10 hours ago