மதுரையில் குடோனியில் பதுக்கி வைத்து ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்ததது அம்பலம்.
மதுரை கல்மேடு பகுதியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டியிருந்த 200 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசிக்காக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து 20 ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. அதன்படி, மதுரை கல்மேடு பகுதியில் உள்ள ஒரு நெல் அரவை ஆலைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், மதுரை கல்மேடு பகுதியில் உள்ள ஆலையில் ரேஷன் அரிசி டன் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டியிருப்பதாக மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதன்பின் எஸ்பி பாஸ்கரன், போலீசுடன் குடோனுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டதில் மூட்டை மூட்டையாக அரிசி இருந்தது தெரியவந்தது.
அரிசி ஆலை அருகே குடோனுக்குள் ஆயிரக்கணக்கான ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. குடோனியில் பதுக்கி வைத்து ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்ததது அம்பலமானது.
எனவே, 200 டன் ரேஷன் அரிசி, குடோன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த 7 லாரிகளை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி பதுக்கல் தொடர்பாக குடோன் பணியார்கள், லாரி ஓட்டுநர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…