மதுரையில் குடோனியில் பதுக்கி வைத்து ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்ததது அம்பலம்.
மதுரை கல்மேடு பகுதியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டியிருந்த 200 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசிக்காக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து 20 ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. அதன்படி, மதுரை கல்மேடு பகுதியில் உள்ள ஒரு நெல் அரவை ஆலைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், மதுரை கல்மேடு பகுதியில் உள்ள ஆலையில் ரேஷன் அரிசி டன் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டியிருப்பதாக மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதன்பின் எஸ்பி பாஸ்கரன், போலீசுடன் குடோனுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டதில் மூட்டை மூட்டையாக அரிசி இருந்தது தெரியவந்தது.
அரிசி ஆலை அருகே குடோனுக்குள் ஆயிரக்கணக்கான ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. குடோனியில் பதுக்கி வைத்து ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்ததது அம்பலமானது.
எனவே, 200 டன் ரேஷன் அரிசி, குடோன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த 7 லாரிகளை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி பதுக்கல் தொடர்பாக குடோன் பணியார்கள், லாரி ஓட்டுநர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…