சென்னையில் 200 மாநகர பேருந்துகள் இயங்கப்படும் என அறிவிப்பு.!

Published by
Dinasuvadu desk

சென்னையில் ஏற்கனவே 175 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் 25 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்.

நாடு முழுவதும்கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில்  மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர் மின்சாரம், தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அரசின் முக்கிய துறைகளை சார்ந்தவர்கள் பணிக்கு வருகின்ற வகையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 175 பேருந்துகள் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக  அறிவித்தார். மேலும் தலைமை செயலகம் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் 50 சதவீத ஊழியர்கள் கொண்டு இயங்கலாம் என உத்தரவிட்டார். இதனால், ஏற்கனவே தலைமை செயலகத்திற்கு இயக்கப்பட்டு வந்த 25 பேருந்துகள் உடன் கூடுதலாக 25 பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப் படுகின்றன என மாநகர போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குனர் கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அத்தியாவசியம், அவசரப்பணி மற்றும் 50% அரசு ஊழியர்களுக்காக 200 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள என மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து பொதுமக்களுக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

17 minutes ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

2 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

2 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

3 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

4 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

5 hours ago