கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 20 வயது இளைஞர் உயிரிழப்பு!

Default Image

முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸானது, அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனை தொடர்ந்து இந்த வைரஸ் நோயானது தொடர்ந்து 210 நாடுகளுக்கு பரவியது. இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக பரவி வருகிற நிலையில், அனைத்து நாடுகளும் இதனை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த வைரஸ் நோயானது, பெரியவர் சிறியவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்கி வருகிறது.  பிஞ்சு குழந்தைகளின் உயிர் கூட இந்த நோயால் பறிபோயுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவாட்டத்தில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 20 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். இவருக்கு ரத்த மாதிரி பரிசோதனை முடிவு இதுவரை வெளியாத நிலையில், ஈரோட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்