20 லட்சம் பேர் வருமானம் இழந்து தவிக்கின்றனர் , அரசின் உதவி அவசியம்- கமல்ஹாசன்

Default Image

’20 லட்சம் பேர் வருமானம் இழந்து தவித்து வரும் நிலையில் அரசு உதவ வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முதலில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.இந்த கால கட்டத்தில் தான் வாடகை வேன் ஓட்டுனர்கள்,தினக்கூலிக்கு செல்பவர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், புகைப்படக்கலைஞர்கள், டாக்ஸி / வேன் ஓட்டுநர் என 20 லட்சம் பேர் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கடன் கட்ட அவகாசம் தந்து விட்டு,அதற்கும் வட்டி போட்டு சுமையேற்றப்படுகிறது.மன அழுத்தத்தில் இருக்கும் அவர்களை காக்க எம் தொழிலாளரணி முனைந்துள்ளது. அரசின் உதவியும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்