தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலவர் பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று, கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த இரு தினங்களாக கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு, பல திட்ட பணிகளை தொடங்கி வாசித்தார்.
இந்நிலையில், தற்போது விருதுநகரில், ரூ.11.36 கோடி மதிப்பில் 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும், ரூ.45.36 கோடி மதிப்பில் 8,466 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பபேசிய தமிழக முதல்வர், விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் பேர் காய்ச்சல் முகாமில் பயன் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் உட்பட அணைத்து மாவட்டத்திலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் கிராமப் பகுதியில் வசிக்கும் மக்கள் சிகிச்சை பெறுவதற்காக ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் கொண்ட 2000 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உஉள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…