இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்திய அரசு இதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அவர்கள் எந்த மாநிலங்களில் இருக்கிறார்களோ அவர்களுக்கு உணவு மற்றும் இருப்பிடத்தை உறுதி செய்யவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தில் தங்கியுள்ள வெளிநாடு வெளிமாநில தொழிலாளர்கள், வெளிமாநில மாணவர்களின் நலனை ஒருங்கிணைக்கவும், முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது கண்காணிக்கவும், மேலும் இரண்டு தனி குழுக்கள் கூடுதலாக அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்டு ஒன்பது சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…