நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிளஸ் டூ தேர்வு விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
பிளஸ் டூ தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் இன்று நண்பகல் 12 மணிக்கு காணொளிமூலம் கருத்துக்கேட்பு நடைபெறும் என தெரிவித்தார். இந்நிலையில், சட்டமன்றத்தில் முக்கியத்துவம் பெற்ற 13 கட்சிகளின் நிர்வாகிகள் உடன் அன்பில் மகேஷ் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், பாஜக, பாமக, மதிமுக, விசிக ,சிபிஎம், சிபிஐ, ம.ம.க, த.வா.க , புதிய பாரதம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
கொரோனா பரவலுக்கு மத்தியில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்தலாமா..? என அன்பு மகேஷ் கருத்து கேட்பில் ஈடுபட்டுள்ளார். பிளஸ் டூ பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பாஜகவின் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டுள்ளார்.
இந்த கருத்துக்கேட்பு நடைபெற்ற பின்னர் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திக்க உள்ளார். இதை தொடர்ந்து, இன்று மாலை +2 தேர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…