தமிழகத்தில் இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1,204 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 1,242 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளார்கள். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 47 வயது ஆண் மற்றும் தனியார் மருத்துவமனையில் 59 வயது ஆண் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 118 பேர் குணமடைந்துள்ளார்கள் என்றும் தமிழகத்தில் இதுவரை 21,994 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் 1,242 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 17, 835 என கூறியுள்ளார். இன்று மட்டும் 2,739 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…