தஞ்சையில் மது அருந்தி 2 பேர் உயிரிழந்த சம்பவம் – இருவர் கைது.!

தஞ்சையில் நேற்று சட்டவிரோதமாக 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே திறக்கப்பட்ட டாஸ்மாக்கில் மது அருந்திய இருவர் உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கியது.
இது குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தியதில், சயனைடு கலந்த மதுவை அருந்தியதால் இருவரும் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்தில் பார் உரிமையாளர் செந்தில் பழனிவேல் மற்றும் பார் ஊழியர் காமராஜ் ஆகியோரை நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் மது அருந்தி 2 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியடைய செய்துள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 22 பேர் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனைகளில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025