பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி மேலும் 2 வழக்கு!

Default Image

பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பு மனு விசாரணை மீது நாளை நடைபெற உள்ள நிலையில், மேலும் 2 வழக்குகள்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் 2 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் அவசர முறையீடு செய்திருந்தார். அவசர வழக்காக மனுதாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி நிலையில், நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு ஓபிஎஸ் தரப்பு மனு விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு ஓபிஎஸ் தரப்பு மனு விசாரணை வரும் நிலையில் மேலும் 2 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு சட்ட சிக்கல் ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்