பிளஸ் டூ தேர்வு தொடங்கும் மே3-ம் தேதிக்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3-ஆம் தேதி தொடங்கி மே 21 முடிவடைய உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வு தேதி அறிவித்ததில் எந்தக் குழப்பமும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை பொறுத்தே தேர்வு தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிளஸ் டூ தேர்வு தொடங்கும் மே3-ம் தேதிக்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் தான் பெரும்பாலும் வாக்குச்சாவடிகள் இருக்கும் என்பதால் அதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை தேர்தல் 93,000 வாக்குச்சாவடியில் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 11, 12-ம் தேதி தமிழகம் வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் என கேட்டறிந்தார். இதனால், ஏப்ரல் இறுதி வாரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் இறுதி வாரத்தில் நடத்த வேண்டும் என்று அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…