ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2 பாடப்பிரிவுகள் தொடர்ந்து நடத்தப்படும் – அண்ணா பல்கலைகழகம்!

Published by
Rebekal

ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த எம்.டெக் பாடப்பிரிவுகள் தொடர்ந்து நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

எம்.டெக் பயோடெக்னாலஜி, எம்.டெக் கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகள் கொரோனா தொற்று காரணமாக மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என்பதால் இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறாது என ஏற்கனவே பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு முறைக்கு பதிலாக மத்திய அரசு 49.9 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்ற கட்டாயப்படுத்த பட்டதால் நடப்பாண்டில் இந்த இரு படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என அறிவித்துள்ளதாகவும் தமிழக அரசின் இட ஒதுக்கீடு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி புகழேந்தி அவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது, இனி ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த பாடப்பிரிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து எழுத்துப்பூர்வமான விளக்கமும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு பிப்ரவரி 12ஆம் தேதிக்கு இந்த விசாரணையை நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago