பந்து என நினைத்து நாட்டு வெடிகுண்டை வைத்து விளையாடிய 2 சிறுவர்கள் காயம் !

Published by
murugan

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் நிமிஸ் (8) ,சூர்யா (8) சூரிய  இவர்கள் இருவரும் அங்குள்ள ஊருணியில் விளையாடி  கொண்டிருந்தபோது உருண்டையான ஒரு பொருள் இருப்பதை பார்த்து இருவரும் அந்த பொருள் பந்து என நினைத்து தூக்கி வீசி விளையாடிக் கொண்டிருந்தப்போது அந்த பொருள் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்தது.

நல்ல வேலையாக தூக்கி எறிந்தபோது மேலே குண்டு வெடித்ததால் அந்த சிறுவர்கள் இருவரும் லேசான காயத்துடன் தப்பினர். இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து காயமடைந்த  இரண்டு சிறுவர்களையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் தூக்கி விளையாடியது  நாட்டு வெடிகுண்டு என போலீஸ் விசாரணையில் தெரிந்தது. மேலும் அங்கு தொடர்ந்து நடத்திய சோதனையில் ஒரு வெடி குண்டை கண்டுபிடித்தனர். குண்டு வைத்தது யார் ? என  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
murugan
Tags: ballBOMB

Recent Posts

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…

3 hours ago

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…

3 hours ago

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…

4 hours ago

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

6 hours ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

6 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

7 hours ago