ஒவ்வொரு அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கும் 25,000 ரூபாய் மானியம் கொடுக்கின்ற அரசு அதிமுக அரசு என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதன்காரணமாக தமிழக அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.
அந்த வகையில் முதலமைச்சர் பழனிசாமி இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஜெயலலிதா இருக்கும்போது உழைக்கும் மகளீருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள்.ஜெயலலிதா அவர்கள் மறைந்தாலும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு அந்த உழைக்கும் மகளீருக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் தொடர்ந்து கொடுத்து வருகிறது அரசு.ஒவ்வொரு அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கும் 25,000 ரூபாய் மானியம் கொடுக்கின்ற அரசு அதிமுக அரசு.தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் தெரிவிக்கப்பட்டது.இதுவரை 2.84 லட்சம் மகளீருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.25,000 மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று பேசியுள்ளார்.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…