2.84 லட்சம் அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.25,000 மானியம் வழங்கப்பட்டுள்ளது -முதலமைச்சர் பழனிசாமி

ஒவ்வொரு அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கும் 25,000 ரூபாய் மானியம் கொடுக்கின்ற அரசு அதிமுக அரசு என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதன்காரணமாக தமிழக அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.
அந்த வகையில் முதலமைச்சர் பழனிசாமி இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஜெயலலிதா இருக்கும்போது உழைக்கும் மகளீருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள்.ஜெயலலிதா அவர்கள் மறைந்தாலும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு அந்த உழைக்கும் மகளீருக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் தொடர்ந்து கொடுத்து வருகிறது அரசு.ஒவ்வொரு அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கும் 25,000 ரூபாய் மானியம் கொடுக்கின்ற அரசு அதிமுக அரசு.தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் தெரிவிக்கப்பட்டது.இதுவரை 2.84 லட்சம் மகளீருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.25,000 மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025