வெள்ளை அறிக்கையில் வெளியிட்டபடி, தனது குடும்பத்தின் மீதுள்ள கடன்தொகையை வழங்க கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு காசோலையுடன் வந்த நபர்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், நேற்று காலை 11:30 மணியளவில் தலைமை செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இவர் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, இது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் சுமத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த காந்தியவாதியான ரமேஷ் தியாகராஜன் என்பவர், காந்தி வேடம் அணிந்து தனது குடும்பத்தின் மீதுள்ள கடனை செலுத்துவதற்காக காசோலையுடன் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவத்திற்கு வந்தார்.
ஆனால், கோட்டாட்சியர் கோட்டை குமார், அவரின் காசோலையை வாங்க மறுத்துவிட்டார். இதனையடுத்து அவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். ஆட்சியரும் அந்த காசோலையை வாங்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து அவர் கூறுகையில், ஒவ்வொருவரும் அந்தந்த குடும்பத்திற்கான கடன் தொகையை கட்ட முன்வர வேண்டும். எனது குடுமத்திற்கான கடனாக நிலுவையில் உள்ள பதிவேட்டில் நகலையும் தரவேண்டும். இந்த கடனை செலுத்த முன்வரும் வசதியற்ற குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் கடனாக கொடுத்து, குடும்பமாக சேர்ந்து சுயதொழில் செய்து நாட்டின் பொருளாதாரத்தையும், தனி நபருடைய வருமானத்தையும் மேம்படுத்த உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…