கொரோனா முன் களப்பணியாளர்கள் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு ரூ.2.5 கோடி கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க, தமிழக அரசி, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30 வரை நீட்டித்து உத்தரவிட்டது. இந்தநிலையில் நடிகர் சூர்யா, சூரரைப்போற்று வெளியீட்டு தொகையில் வரும் பணத்தில் ஐந்து கோடி ரூபாயை பொது மக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் கொரோனா யுத்த களத்தில் முன் நின்று பணியாற்றியவர்களுக்கு வழங்கவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.
அந்தவகையில், கொரோனா முன் களப்பணியாளர்கள் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு ரூ.2.5 கோடி கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பொதுமக்கள் மற்றும் தன்னலமின்றி ‘கொரோனா களப்பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு 2.5 கோடி ரூபாய் கல்வி ஊக்கத் தொகையாக வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
ஒதுக்கப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், 2.5 கோடி ரூபாய் அவரின் திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும், அதில் 1.5 கோடி ரூபாய் திரைப்படத் தொழிலாளர்கள், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் சங்க அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, கொரோனா முன்களப்பணியாளர்கள் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு ரூ.2.5 கோடி கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளதாகவும், பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவ/மாணவிக்கு மட்டும், கல்வி கட்டணமாக அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்த அவர், அதற்கான விண்ணப்ப படிவங்களை www.agaram.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…