2-வது நாளாக நெல்லையில் மக்களை சந்தித்து வருகிறார் கமல்ஹாசன்!

Default Image

, நெல்லை மாவட்டத்தில் 2-ஆம் நாளாக சுற்றுப்பயணம் செய்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மக்களை சந்தித்து வருகிறார்.மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் மக்களைச் சந்திப்பதற்காக, சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கிய பயணம் இன்று 3-வது நாளை எட்டியுள்ளது. நேற்று நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த அவர், 2-ஆம் நாளாக நெல்லை மாநகர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மக்களைச் சந்தித்தார்.

பாளையங்கோட்டையில் மக்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், தான் பயணம் செய்து வருவது மக்களைப் புரிந்து கொள்ள மட்டுமே என்றும், வேறு எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை என்றும் கூறினார்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்