2வது ரோப்கார் பணிகள் பழநியில் ஜூனில் துவக்கம்!

Published by
Venu

ஜூன் முதல் வாரத்தில் பழநி கோயிலில் 2வது ரோப்கார் அமைப்பதற்கான பணிகள்  துவங்க உள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்காக மேற்கு கிரிவீதியில் இருந்து 3 மின்இழுவை ரயில்கள் (வின்ச்) இயக்கப்படுகின்றன. தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரோப்கார் 2004, நவம்பர் 3ம் தேதி முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது. இதில் 1 மணி நேரத்திற்கு சுமார் 350 பேர் மட்டுமே பயணிக்க முடிகிறது.

இதனால் விடுமுறை தினங்கள், விசேஷ நாட்களில் ரோப்கார் நிலையத்தில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. எனவே, 2வது ரோப்கார் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்குப்பின் 2வது ரோப்கார் அமைக்க தற்போது டெண்டர் விடுக்கப்பட்டது. இதனடிப்படையில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ரூ.71 கோடியில் 2வது ரோப்கார் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டது. 2வது ரோப்காரில் 1 மணி நேரத்தில் சுமார் 1,200 பேர் பயணிக்கலாம். இதற்கான பணிகள் ஜூன் முதல் வாரம் துவங்க உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

7 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

15 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago