தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,969 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,969 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,73,352 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 194 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,289 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,839 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,18,777 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,65,325 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3,85,36,958 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 20,286 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லெபனான் : ஒரு வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையேயான போர் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி…
சென்னை : தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவின் சர்ச்சைக்குரிய கருத்து தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சமந்தாவின் விவாகரத்து,…
லெபனான் : இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகுவை தீர்த்துக்கட்ட போவதாக ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோரை…
சென்னை : தென் தமிழகத்தில் வறண்ட வானிலை தொடரும், ஆங்காங்கே மிதமான மழை பெய்யும் எனவும், இதன் காரணமாக தென்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…
சென்னை -மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன் பலருக்கும் முன் அறிகுறிகள் தென்படும். இதற்கு காரணம் என்னவென்றும் , தீர்வுகளைப்…