நாளை முழுமுடக்கம் என்பதால் 193 சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு.!

Default Image

சென்னையில் நாளை முழு முடக்கம் என்பதால் 193 சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறை தீவிர கண்காணிப்பு.

தமிழ்நாடு முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். சென்னையில் நாளை 193 சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறை தீவிர கண்காணிப்பு ஈடுபடவுள்ளனர். பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் தவிர மற்ற செயல்பாடுகளுக்கு அனுமதியில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஊரடங்கை மீறி வேறு வாகனங்கள் வந்தால் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தேவையின்றி வெளியே வருவது, கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும், சந்தேகங்களுக்கு 044-23452330, 23452362, 90031 30103-ல் தொடர்பு கொள்ளலாம் எனவும்  காவல்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்