18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம்: பின்னணியில் பி.எச்.பாண்டியன்

Published by
Dinasuvadu desk

சென்னை: முதல்வர் பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை; அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று, அ.தி.மு.க.,வின் 19 எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். அதன் பின், புதுச்சேரியிலும், கர்நாடக மாநிலம் குடகு பகுதியிலும் அவர்கள் தங்க வைக்கப்பட்டு, முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை வைத்தனர்.இதையடுத்து, அ.தி.மு.க., சட்டசபை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ., குறிப்பிட்ட 19 பேர் மீதும், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ள, குறிப்பிட்ட 19 பேருக்கும், சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டார்.இதற்கிடையே, கம்பம் தொகுதி எம்.எல்.ஏ., ஜக்கையன், எடப்பாடி முகாமுக்கு மாறினார். இதனால், அவர் மீது மேற்கொள்ளவிருந்த நடவடிக்கையை விலக்கிக் கொண்ட சபாநாயகர், மீதமிருந்த 18 எம்.எல்.ஏ.,க்களையும், தகுதி நீக்கம் செய்து அதிரடியாக அறிவித்தார். முதலில் தயக்கம்: முன்னதாக, 18 பேர் மீதும் தகுதி நீக்கம் நடவடிக்கையை மேற்கொள்ள சபாநாயகர், தயக்கம் காட்டினார். சட்ட விதிகளை மேற்கோள் காட்டி, அவர் மறுக்க, அந்த நேரத்தில், முன்னாள் சபாநாயகர் வழக்கறிஞருமான பி.எச்.பாண்டியனின் ஆலோசனைகள், சபாநாயகர் தனபாலுக்கு வந்து சேர்ந்தன.பி.எச்.பாண்டியனின் அனுபவங்களும், சட்ட அறிவும் தனபாலுக்கு எடுத்துச் சொல்லப்பட்டதும், 18 எம்.எல்.ஏ.,க்களையும், அதிரடியாக தகுதி நீக்கம் செய்ய ஒப்புக் கொண்டார். அதன்படியே, தகுதி நீக்கம் செய்து அறிவிப்பும் வெளியிட்டார்.

Published by
Dinasuvadu desk
Tags: #Politics

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

57 mins ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

12 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

17 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

17 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

17 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

18 hours ago